Date:

அரை சொகுசு பஸ் சேவை இல்லை!

எதிர்வரும் மே மாதத்திற்குப் பிறகு அரை சொகுசு பயணிகள் பஸ் சேவையை முற்றாக நிறுத்துவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அரை சொகுசு பஸ்கள் குறித்து பயணிகளிடம் இருந்து வரும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர்கள் நாயகம் நிலான் மிரண்டா தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்துவெளியிட்ட அவர், போக்குவரத்து அமைச்சகத்தின் உத்தரவுப்படி, அரை சொகுசு பஸ் சேவையை சாதாரண சேவை அல்லது சொகுசு சேவையாக மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் குறித்து அனைத்து பஸ் உரிமையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மிரண்டா கூறினார்.

சுமார் 430 அரை சொகுசு பஸ்கள் தற்போது சேவையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காலி முகத்திடலில் உள்ள மின்கம்பமொன்றின் உச்சியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்.!

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...

ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15)...

இன்று முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று முதல் (15) குறைவடையும் என...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம்!

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு...