Date:

வாழ்த்துவதாக தெரிவித்து முத்தம் கொடுத்த அதிபர் கைது

தனியார் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை ஒருவரை, புதுவருட வாழ்த்து தெரிவிப்பதாக கூறி பலவந்தமாக முத்தமிட்ட அப் பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மினுவங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடவத்த பிரதேசத்தில் வசிக்கும்  இரண்டு பிள்ளைகளின் தந்தையே (வயது 61)  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் 23 வயதான ஆசிரியை அளித்த முறைப்பாட்டின் பெயரில் சந்தேக நபரான அதிபரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தன்று குறித்த ஆசிரியை பணிகளை முடித்து வீட்டுக்குச் செல்ல ஆயத்தமான போது புதுவருடத்திற்கு வாழ்த்து தெரிவிக்க முடியவில்லை எனக்கூறி சந்தேக நபரான அதிபர் வலுக்கட்டாயமாக ஆசிரியையை முத்தமிட்டுள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரஜரட்ட பல்கலை பேராசிரியர்களின் வேலைநிறுத்தம் தீவிரம்

ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம், அண்மையில் ஆரம்பித்திருந்த அடையாள வேலைநிறுத்தத்தை, காலவரையற்ற...

நவம்பர் 04 நள்ளிரவுடன் தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள் தடை

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான...

இன்று முதல் அமுலுக்கு வரும் ‘ஷொப்பிங் பை’ சட்டம் இதோ!

கைப்பிடிகளுடன் கூடிய பொலிதீன் பைகளுக்கு, வர்த்தக நிலையங்கள் கட்டணம் அறவிட வேண்டும்...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றம்?

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என...