ஏப்ரல் 25ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தலுக்கான புதிய திகதி நீதிமன்ற உத்தரவுக்கமைய அல்லது போதிய நிதி வழங்கப்படுவதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு சிறப்பு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிவிப்பில், தேர்தலை திட்டமிட்டபடி நடத்த பல்வேறு தடைகள் இருந்தபோதிலும், தேவையான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காததாலும், ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களாலும் தேர்தலை ஒத்திவைக்க நேரிட்டதாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள சிறப்பு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.