Date:

நீர்கொழும்பு கொச்சிக்கடையில் சஹ்ரான் ஹாஷிமின் மைத்துனரும் அவரது மனைவியும் கைது

உயிர்த்த ஞாயிறு  தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு மூன்று வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட சஹ்ரான் ஹாஷிமின் மைத்துனரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குளியாப்பிட்டிய கட்டுபெத்த பிரதேசத்திலிருந்து கொச்சிக்கடை பகுதியில் உள்ள தனது மனைவியின் பெற்றோரின்  வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது கொச்சிக்கடை பொலிஸாரால் இவர்கள்  கைது செய்யபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உயிர்த்த ஞாயிறு  தாக்குதலின் மூளையாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமாவின் சகோதரர் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி  தெரிவித்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சந்தேகத்தின் பேரில் கொச்சிக்கடை பொலிஸாரால் இவர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 2019 ஆம் ஆண்டு முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டு 2022 செப்டெம்பர் 23 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டவராவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன தேசத்தை ஆதரிக்கிறேன், பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான பிரிட்டனின் முடிவை வரவேற்கிறேன்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான பிரிட்டன் பிரதமரின் முடிவை வரவேற்பதாக  நாடாளுமன்ற உறுப்பினர் உமா...

கொஸ்கொடவில் துப்பாக்கிச் சூடு

கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த...

நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு...

பிரிட்டிஷ் பிரதமர் கொடூரமான ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு விருதுவழங்கி, இஸ்ரேலியர்களை தண்டிக்கிறார்

பிரிட்டிஷ் பிரதமர் கொடூரமான ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு விருதுகளை வழங்கி,  பாதிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை...