Date:

நாட்டில் நீர் விநியோகம் குறைவடையும் ஆபத்து

எமது சாதாரண கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகள் தவறியுள்ளதால்  தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வோம்  என நீர்வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

நீர்வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் ஆரம்பித்திருக்கும் தொழிற்சங்க போராட்டம் தொடர்பாக அதன் இணை அமைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்ணாயக்க தெரிவிக்கையில்,

எமது ஒன்றிணைந்த நீர்வழங்கல் தொழிற்சங்கம் 4ஆம் திகதி அலுவலக மற்றும் நுகர்வோர் சேவையில் இருந்து விலகிக்கொண்டோம். நிர்வாக சேவை அதிகாரிகளால் எமது கோரிக்கைகளுக்கு தீர்வொன்றை வழங்கும் என்றே நாங்கள் எதிர்பார்த்ததோம்.

ஆனாலும் குறைந்த பட்சம் நீர்வழங்கல் சபை தலைவராே அல்லது அமைச்சராே எமது கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு கூட நேரம் வழங்கவில்லை.

அதனால் எமது தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ள நாங்கள் திர்மானித்தாேம்.  அதன் பிரகாரம் நாங்கள் அலுலக மற்றும் நுகர்வோர் சேவை நடவடிக்கைகளில் இருந்து தொடர்ந்து ஒதுங்கிக்கொள்கிறோம்.

இதேவேளை, இவ்வாறான நடவடிக்கை காரணமாக நீர் தடைகள் ஏற்படும்போது. அதனை திருத்தும் நடவடிக்கைகளில் சற்று தாமதம் ஏற்படும். அதனை திருத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளமாட்டோம். அதனால் ஒரு சில இடங்களில் நீர் விநியோகம் குறைவடையும் ஆபத்து இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கைக்காக 2025 ஆம் ஆண்டில் வரலாற்றுச் சாதனை படைத்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள்!

இலங்கையின் 40 வருட கால வெளிநாட்டு வேலைவாய்ப்பு வரலாற்றில், அதிகூடிய வெளிநாட்டுப்...

முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான ரமழான் கால விசேட சலுகை..!

ரமலான் காலத்தில் முஸ்லிம் அரச ஊழியர்கள் தமது மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு...

இலங்கை சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமைக்கோட்டின் கீழ் | திடுக்கிடும் புள்ளிவிபரங்கள்!

நாட்டின் சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் (1/4) வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வறுமைப்...