பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவிவரும் பொய்யான செய்தி தொடர்பில் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குறிப்பாக அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவுசெய்தல், தொலைபேசி அழைப்புகளை சேமித்தல், வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் அழைப்புகளை கண்காணிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் செய்திகள் முற்றிலும் தவறானது என பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கப்பட்டுள்ளது.