Date:

சம்பள பிரச்சினை தொடர்பில் இன்று புதிய நடவடிக்கை

சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறுகோரி, ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கை இன்று 45 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

இந்த நிலையில், தங்களது சம்பள பிரச்சினை தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய நடவடிக்கை குறித்து, இன்று கூடி தீர்மானம் மேற்கொள்ள உள்ளதாக, ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இன்று ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் கூடி தங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்து அறிவிக்க உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆசிரியர் – அதிபர் சம்பள பிரச்சினை தொடர்பான அமைச்சரவையின் தீர்மானம், அடுத்தவாரம் அறிவிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும நேற்று (24) தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லிபிய முன்னாள் தலைவர் கடாபியின் மகன் சுட்டுக் கொலை

லிபியாவின் முன்னாள் தலைவர் மும்மர் கடாபி. இவர் லிபியாவை 42 ஆண்டுகள்...

இறையாண்மைமிக்க தேசத்தை கட்டியெழுப்பும் தருணம் ஆரம்பம் – பிரதமர்

விழுமியங்கள் நிறைந்த இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தனிப்பட்ட ரீதியாகவும், கூட்டு ரீதியாகவும்...

பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயார் – ஜனாதிபதி

நாட்டின் மனித வளத்தைப் பயன்படுத்தி, வேறுபாடுகளைப் புறந்தள்ளி, பொருளாதார ரீதியாக வலுவான...

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்தமை காரணமாக நாட்டிலும்...