Date:

ரைசினா டயலாக் மாநாட்டில் பங்குகொள்ள அப்துல்லா ஷாஹித் இந்தியா விஜயம்!

மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித், புவிசார் அரசியல் மற்றும் பூகோள பொருளாதாரம் தொடர்பான இந்தியாவின் இடம்பெறும் ரைசினா மாநாட்டில் பங்கேற்க இந்தியா சென்றுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து சுதந்திர சிந்தனைக் குழுவான அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் (Observer Research Foundation) இந்த மாநாட்டை நடத்துகிறது.

குறித்த மாநாடு 2016 ஆம் ஆண்டு முதல் புது டில்லியில் வருடாந்தம் நடத்தப்படுகின்றது.

இந்த மாநாட்டில் சர்வதேச சமூகம் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க உலகெங்கிலும் உள்ள கொள்கை ஆய்வாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் துறை சார் நிபுணர்கள் கல்வியாளர்களை ஒன்றிணைக்கும் பலதரப்பு மாநாடு ஆகும்.

வெளியுறவு அமைச்சர் ஷாஹித் இந்தியா செல்வது இது முதல் தடவையல்ல படந்த ஒகஸ்ட் 2022 யில் அவர் இந்தியாவிற்கு விஜயம் செய்தார். ஜனாதிபதி சோலிஹ் பதவியேற்றதில் இருந்து மாலத்தீவின் மூத்த அரசு அதிகாரிகள் அடிக்கடி இந்தியாவுக்குச் செல்வது, இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவைக் எடுத்துகாட்டுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக, உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் என்ற போலிக்காரணத்தின்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் நீதிமன்றுக்கு..

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக முன்னாள்...

Breaking காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்!

காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரமாக இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...

கெஹெலியவின் வீட்டில் புதிய நீதிமன்றம்

புதிய 4 மேல் நீதிமன்றங்களை விரைவாக ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக,...