நாட்டில் மூவரில் ஒருவர் செயலற்றவராக அதாவது (சோம்பேறியாக) அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷெரின் பாலசிங்கம் தெரிவித்தார்.
குறிப்பாக மடிக்கணினி பாவனை, தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம், கைத்தொலைபேசிக்கு அடிமையாதல் போன்ற காரணங்களால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாறான நிலை காரணமாக பல்வேறுவகையான நோய்கள் ஏற்படுவதாக வும் இரத்த அழுத்தம், இதய நோய், சர்க்கரை நோய், போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் செயலில் மாதமாக நியமிக்கப்பட்டுள்ளது, மேலும் தொற்று நோயற்ற சுகாதார அலுவலகம் அந்த மாதத்தில் நிறுவன மட்டத்தில் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவும் நாளாந்தம் உடற்பயிற்சி செய்ய ஒவ்வொருவரையும் ஊக்குவிப்பதன் மூலம் பல நோய்களைத் தடுக்க முடியும் என நிபுணர் தெரிவித்துள்ளார்.