Date:

நுவரெலியா வசந்தக்கால நிகழ்வுகள்

நானுஓயா நிருபர்

நுவரெலியாவில் வருடம் தோறும் நடைபெறும் ஏப்ரல் வசந்தக்கால நிகழ்வுகள் நாளை முதலாம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகும்.

நுவரெலியாவில் வருடம் தோறும் நடைபெறும் ஏப்ரல் வசந்தக்கால களியாட்ட நிகழ்வுகள் நாளை முதலாம் திகதி சனிக்கிழமை காலை ஆரம்பமாகும். இதனை தொடர்ந்து எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை தினந்தோறும் கலை கலாச்சார விளையாட்டு போட்டிகளும் மலர் கண்காட்சி போடிகளும் நடைபெறும்.

நுவரெலியா மாநகரசபை விசேட ஆணையாளர் திருமதி சுஜீவா போதிமான தலைமையில் நாளை ஏப்ரல் முதலாம் திகதி நுவரெலியா கிறகறி வாவிக்கு அருகாமையில் பாடசாலை மாணவமாணவிகளின் பேண்ட்வாத்திய அணிவகுப்பு மறியாதையுடன் வசந்தக்கால நிகழ்வுகள் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்படும்.

விசேட நிகழ்வுகளாக எதிர் வரும் ஏப்ரல் 8, 9 ஆம் திகதிகளில் மாகாஸ்தோட்ட மலை ஏறும் மோட்டார்காரோட்டப் போட்டியும், 10,11 சிங்கல் றீ மலை ஏறும் போட்டியும்,15, 16 ஆம் திகதிகளில் மோட்டகுரோஸ் ஓட்டப்போட்டியும், 15, 23 ஆம் திகதிகளில் குதிரைப்பந்தய போட்டியும் 17, 18 ஆம் திகதிகளில் நுவரெலியா விக்டோரியா பூங்காவில் மலர் கண்காட்சி போட்டியும், 21, 22 ஆம் திகதிகளில் நுவரெலியா வாவி கரைசேற்றில் 4*4 ஜீப் ஓட்டப்போட்டியும், 22, முதல் 30 ஆம் திகதி வரை நுவரெலியா மாநகரசபை விளையாட்டு உள்ளகரங்கில் அகில இலங்கை (பெட்மிடன்) பூப்பந்தாட்டம் போட்டியும் உட்பட பல நிகழ்ச்சிகள் வசந்தகாலத்தை முன்னிட்டு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த வருடங்களை விட இம்முறை பெருந்திரளான சுற்றுலா பயணிகள் வருகை தருவாகள் என எதிர்பார்க்கப் படுகிறது. நுவரெலியாவிலுள்ள சுற்றுலா ஹோட்டல்களிலும் சுற்றுலா விடுதிகளிலும் முன்கூட்டியே பதிவுகள் செய்துள்ளதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

நுவரெலியாவில் ஏப்ரல் வசந்த காலத்தை கழிப்பதற்காக வருகைதரவிருக்கும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அடிப்படை வசதிகளை நுவரெலியா மாநகரசபை செய்து கொடுப்பதற்கும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக நுவரெலியா பொலிஸார் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளதும் குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதி பொதுமன்னிப்பு: சிறை கைதிக்கு கடூழிய சிறை

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட டபிள்யூ.எம்....

நாட்டின் 219 மருந்தகங்களுக்கு உரிமம் இரத்து – அமைச்சர் அறிவிப்பு

2025 ஜூலை 18 வரையிலான காலப்பகுதியில், நாட்டில் உள்ள 219 மருந்தகங்களின்...

IMF நிதி வசதி குறித்த ஐந்தாவது மதிப்பாய்வு செப்டம்பரில்

இலங்கைக்கு வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வு...

ஈஸ்டர் தாக்குதல்: பிரதி அமைச்சர் இராஜினாமா செய்ய தேவையில்லை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்காக பிரதி...