Date:

‘ஜெய் ஸ்ரீராம்’ கூற மறுத்த இமாம் மீது தாக்குதல்; தாடியை வெட்டி அட்டூழியம்!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அன்வா கிராமத்தில் இந்துத்துவா குழுவினால் மசூதியின் இமாமை தாக்கி அவரது தாடியை வெட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற இந்து மத முழக்கத்தை முழங்க மறுத்ததற்காக இந்துத்துவா கழுவினால் மசூதிக்குள் புகுந்து இமாம் ஜாகிர் சயீத் கவாஜாவை தாக்கியுள்ளனர்.

குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் மசூதிக்குள் புனித குர்ஆனை ஓதிக் கொண்டிருந்த போது இடம்பெற்றதாக இமாம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மசூதிக்குள் நுழைந்து குறித்த குழுவினர் , குரான் ஓதிக் கொண்டிருந்த தன்னை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லும்படி வற்புறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.

சொன்னதைச் செய்ய மறுத்ததால், மூன்று நபர்கள் அவரை மசூதிக்கு வெளியே அழைத்துச் சென்று தாக்கினர். பின்னர் தான் மயக்கமுற்றதாகவும் இமாம் கூறினார். சுயநினைவு திரும்பியபோது, ​​தனது தாடி வெட்டப்பட்டிருப்பதை உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் போகர்தன் பொலிஸ் நிலையம் ர், சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி ஆராய்ந்து வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில், தாக்குதல் நடத்தியவர்கள் உள்ளூர்வாசிகள் இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து, அன்வர் கிராமத்தில் அருகமை ஊர்களிலும் பதட்டத்தை தணிக்க, குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு தொடர்ந்து வருகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வௌ்ளம்பிட்டியவில் வீடொன்றுக்கு முன்னால் கைக்குண்டு

வெள்ளம்பிட்டிய, டொனால் பெரேரா வீதியில் உள்ள அல்பாவில் வீடமைப்பு தொகுதியில், வீடொன்றுக்கு...

2026 இல் சிறந்த 25 நகரங்களில் யாழ்ப்பாணம்

உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet),2026 ஆம் ஆண்டிற்கான...

அஸ்வெசும தரவு: உலக வங்கி பிரதிநிதிகள் அதிரடி

"அஸ்வெசும" சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும்போது புதுப்பிக்கப்பட்ட மற்றும்...

மோந்தா புயல் சூறாவளியாக வலுப்பெறுகிறது

வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. மோந்தா என்ற இந்த புயல் நாளை காலை சூறாவளியாக வலுப்பெற்று, மாலையில் ஆந்திரப் பிரதேச கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோந்தா புயல் காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் இன்று பலத்த மழை பெய்யும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.