Date:

ஒட்சிசனை வழங்கியமைக்காக இந்திய அரசாங்கத்திற்கு இலங்கை நன்றி

நாட்டுக்குத் தேவையான ஒட்சிசனை உரிய நேரத்தில் வழங்கியமைக்காக இந்திய அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும, நாட்டுக்குத் தேவையான ஒட்சிசனை உரிய நேரத்தில் இந்தியா வழங்கியமைக்காக அரசாங்கத்தின் சார்பில் இவ்வாறு நன்றி தெரிவித்தார்.

நாட்டின் ஒட்சிசன் தேவையை முறையாக முன்னெடுப்பதற்காக அரசாங்கம் முன்வைத்த கோரிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய அரசாங்கம் உடனடியாக 140 மெற்றிக் தொன் ஒட்சிசனை வழங்கியதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எமது அயல் நட்புறவு நாடு என்ற ரீதியில் இதுதொடர்பாக இந்திய மக்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரூ.10 லட்சம் செலுத்த தோனிக்கு உத்தரவு

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிரான மானநஷ்ட வழக்கில் தொடர்புடைய குறுந்தகட்டை...

இலங்கை – ஆஸி போட்டியின் டிக்கட்டுக்கள் விற்றுத்தீர்ந்தன!

உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரில் எதிர்வரும் (16) திங்கட்கிழமை இடம்பெறவுள்ள...

குடிவரவு, குடியகல்வு திணைக்கள தரவுக் கட்டமைப்பு வழமைக்கு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவு கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழிநுட்ப கோளாறு...

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார்

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார். சிறிது...