Date:

ஒட்சிசனை வழங்கியமைக்காக இந்திய அரசாங்கத்திற்கு இலங்கை நன்றி

நாட்டுக்குத் தேவையான ஒட்சிசனை உரிய நேரத்தில் வழங்கியமைக்காக இந்திய அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும, நாட்டுக்குத் தேவையான ஒட்சிசனை உரிய நேரத்தில் இந்தியா வழங்கியமைக்காக அரசாங்கத்தின் சார்பில் இவ்வாறு நன்றி தெரிவித்தார்.

நாட்டின் ஒட்சிசன் தேவையை முறையாக முன்னெடுப்பதற்காக அரசாங்கம் முன்வைத்த கோரிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய அரசாங்கம் உடனடியாக 140 மெற்றிக் தொன் ஒட்சிசனை வழங்கியதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எமது அயல் நட்புறவு நாடு என்ற ரீதியில் இதுதொடர்பாக இந்திய மக்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூசிலாந்தை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இன்று (14) இடம்பெற்ற...

ஜிந்துப்பிட்டியில் ஐந்துபேர் மீது துப்பாக்கிச்சூடு

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக 100 மடிக்கணினிகள் வழங்கி வைத்து சாதனை படைக்கும் ஹாஷிம் ஓமர் பவுண்டேஷன்

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும் வேலைத்திட்டத்தின்...

13.56% ஆல் அதிகரிக்கும் மின் கட்டணம்

மின்சாரக் கட்டணத்தை 13.56% ஆல் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபையினால் இலங்கை...