Date:

பாடசாலை சென்ற கொழும்பின் பிரபல வர்த்தகரின் மகள் துஷ்பிரயோகம்

கொழும்பு பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் பதினேழு வயது சிறுமியுடன் காதல் தொடர்பில் இருந்த 23 வயது நபர், சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்ததாக கொழும்பு மத்திய பிரிவிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பல்வேறு குற்றச்சாட்டு பிரிவின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருடன் விடுதி அறையில் இரவு தங்கியிருந்த 17 வயது சிறுமியும்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த சிறுமி கொழும்பின் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடசாலைக்கு சென்ற தனது மகள் வீடு திரும்பவில்லை என சிறுமியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தனது மகளுக்கு சுமார் 6 வருடங்கள் ஒருவருடன் காதல் தொடர்பு இருந்ததாகவும் பலமுறை எச்சரித்தும் மகள் அந்த  தொடர்பை நிறுத்தவில்லை எனவும் தாயார் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். சிறுமியுடன் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன்  எந்த தொழிலும் இல்லாதவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...

சட்டமூலத்தை சட்டமாக்கினார் சபாநாயகர்

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு...

முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அடுத்த மாதம் ஆரம்பம், தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி பெறப்படும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின்...

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள்:

கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர்...