Date:

நீதிச்சேவை ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

திமன்றத்தில் ஆஜராகாத பிரதிவாதிகள் அல்லது சந்தேகநபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என நீதிச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமையால், இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான நபர்களை பாதிப்பிற்குள்ளாக்கும் வகையிலான கட்டளைகளை அநாவசியமான முறையில் பிறப்பிக்க வேண்டாம் என நீதிச்சேவை ஆணைக்குழு சுற்றுநிரூபத்தினூடாக நீதிபதிகளுக்கு தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலையின் கீழ், நீதிமன்ற செயற்பாடுகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, நீதிமன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அத்தியாவசிய வழக்குகள் மாத்திரமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகவும், ஏனைய வழக்குகள் அறிவித்தல்களினூடாக ஒத்திவைக்கப்படுவதாகவும் ஆணைக்குழு மேலும் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைவோம்- ஜனாதிபதி

அண்மைய அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும் வளர்ச்சியடைந்து வந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய...

முகாம்களில் தங்கியுள்ளோரை விரைவாக மீளக் குடியமர்த்த திட்டம்

நிவாரண முகாம்களில் தற்போது சுமார் 7,000 பேர் தங்கியுள்ளதாகவும், அவர்களை 2...

அனர்த்தங்களால் 6000 வீடுகளுக்கு முழுமையான சேதம்

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட...