நாட்டின் பல பகுதிகளில் நேற்று முதல் வளிமண்டலத்தின் நிலை ஆரோக்கியமற்றதாக காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நேற்றைய தினம், நாட்டின் மிகவும் மோசமான காற்று நிலை கொழும்பு நகரிலிருந்து பதிவாகியுள்ளது.
கொழும்பின் காற்றின் தர மதிப்பு 135 அலகுகள் என்று நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், கம்பஹா நகரத்தின் காற்றின் தர மதிப்பு 130 அலகுகளாகவும், யாழ்ப்பாண நகரம் 128 அலகுகளாகவும், கொழும்பு பத்தரமுல்லை மேற்குப் பகுதியில் 121 அலகுகளாகவும் பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும், காற்றின் தரக் குறியீட்டிற்கமைய, 101-150 அலகுகள் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.