Date:

யுவதியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர்!!

பொல்பித்திகம பஸ் நிலையத்தில் நின்றிருந்த யுவதி ஒருவரை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று தாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரொருவர் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்ட நிலையில், குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்தனர்

இவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் யுவதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கணினி வகுப்பிற்குச் சென்ற குறித்த யுவதி இரவு வெகுநேரமாகியும் பஸ் வராத காரணத்தினால் மோட்டார் சைக்கிளில் ஏறிய போது குறித்த நபர் யுவதியை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த யுவதியை வீட்டினுள் இழுத்துச் சென்றதாகவும், அவரிடமிருந்து தப்பிக்க முற்பட்ட போது, ​​குறித்த நபர் யுவதியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது யுவதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து அந்த நபரை பிடித்து அடித்து, பொல்பித்திகம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான அவர் முதலில் பொல்பித்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொல்பித்திகம பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...