Date:

Breaking-நாளைய பாடசாலை தவணை பரீட்சைகளை ஒத்திவைக்க பணிப்புரை

நாளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் கருதி பாடசாலைகளின் தவணைப் பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை (15) நடைபெறவிருந்த பாடசாலை தவணைப் பரீட்சைகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மேல் மற்றும் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேல் மாகாணத்தில் நாளை (15) ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தரம்  9 மாணவர்களுக்கான தவணைப் பரீட்சைகளை மார்ச் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தரம் 10,  11 மாணவர்களுக்கான பாடசாலை தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதிக்கும் ஒத்திவைக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்தில் நாளை நடைபெறவிருந்த தரம் 6 – 9 வரையான மாணவர்களுக்கான பரீட்சைகளை மார்ச் 17ஆம் திகதிக்கும், தரம் 10, 11 மாணவர்களுக்கான பரீட்சைகளை மார்ச் 22ஆம் திகதிக்கும் ஒத்திவைக்குமாறு மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

நாளை திட்டமிடப்பட்டுள்ள பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக, மாணவர்கள் எதிர்நோக்கக்கூடிய போக்குவரத்து உள்ளிட்ட பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹாலிவுட்டில் எனது வாழ்க்கையை இழப்பதற்கு பயப்படவில்லை

காசா போர் நடைபெற்ற போது, காசா போருக்கு எதிராக துணிச்சலாக குரல்...

சம்பத் மனம்பேரி மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை

ஐஸ்' போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு...

குடு ரொஷான் கைது

போதைப்பொருள் கடத்தல்காரரான 'குடு ரொஷான்' என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்குளிய பகுதியில் அமைந்துள்ள...

பிணையில் விடுதலையானார் அர்ச்சுனா எம்.பி

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த பாராளுமன்ற...