Date:

புதிய வரிக்கொள்கைக்கு எதிர்ப்பு: நுவரெலியாவில் கவன ஈர்ப்பு போராட்டம்

புதிய வரி அறவீட்டுக்கு எதிராக நுவரெலியா பிரதான அஞ்சல் நிலைய ஊழியர்கள் இணைந்து நுவரெலியா பிரதான அஞ்சல் நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை செவ்வாய்க்கிழமை நண்பகல் முன்னெடுத்தனர்.

குறிப்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது அரசாங்கத்தின் சட்டவிரோதமான வரிக்கொள்கைக்கு எதிராகவும் , வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து மற்றும் உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்க கோரியும் , மின்சார கட்டணம் அதிகரிப்புக்கு எதிராகவும் , அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக தெரிவித்து தபால் ஊழியர்களுக்குத் தேவையான சில கோரிக்கையை முன்வைத்தும் அரசாங்கத்துக்கு எதிரான சுலோகங்களை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஒருமணித்தியாலம் ஈடுபட்ட பின்னர் ஆர்ப்பாட்டகாராக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

நுவரெலியா நிருபர் – செ.திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹாலிவுட்டில் எனது வாழ்க்கையை இழப்பதற்கு பயப்படவில்லை

காசா போர் நடைபெற்ற போது, காசா போருக்கு எதிராக துணிச்சலாக குரல்...

சம்பத் மனம்பேரி மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை

ஐஸ்' போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு...

குடு ரொஷான் கைது

போதைப்பொருள் கடத்தல்காரரான 'குடு ரொஷான்' என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்குளிய பகுதியில் அமைந்துள்ள...

பிணையில் விடுதலையானார் அர்ச்சுனா எம்.பி

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த பாராளுமன்ற...