கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த யாழ்தேவி சொகுசு கடுகதி ரயில் ஒருகொடவத்த புகையிரத பாலத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.
இரண்டு ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பிரதான ரயில் மார்க்கத்தில் இயங்கும் ரயில் சேவை தடைபட்டுள்ளதாகவும் இதனால் கொழும்பு நோக்கிய வரும் ரயில்கள் சில தாமதமாக வரும் என பிரதான ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.