கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயிலில் இருந்து நேற்றிரவு (10) பச்சிளம் குழந்தை ஒன்று மீட்கப்பட்ட சம்பவத்தில் குறித்த குழந்தையின் தாயும், தந்தையும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த குழந்தையின் தாயும், தந்தையும் வெவ்வேறு இடங்களில் வைத்து கைதாகியுள்ளனர்.
அந்த வகையில், கைதான 25 வயதான தாய் பண்டாரவளையிலும், 26 வயதான தந்தை கொஸ்லாந்தையிலும் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.