Date:

ஊரடங்கு உத்தரவை மூன்று வாரங்களுக்கு நீட்டிக்குமாறு வலியுறுத்தல்

இலங்கையில் நிலவும் சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கு நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு போதுமானதாக இருக்காது என தேசிய மக்கள் சக்தி செயலாளர், வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு செவிசாய்த்து, தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மூன்று வாரங்களுக்கு நீட்டிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை நோயாளிகளின் எண்ணிக்கை, இறப்புகள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை, வைத்தியசாலைகளின் இடவசதி மற்றும் வைரஸின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் பயணக் கட்டுப்பாடுகளின் காலம் தீர்மானிக்கப்பட வேண்டும் என வைத்தியர் நிஹால் அபேசிங்க கூறியுள்ளார்.

மேலும், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டும் தீர்வு அல்ல, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்துவதற்கு பதிலாக அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு அரசாங்கம் விரைந்திருப்பதே அதிக எண்ணிக்கையிலான இறப்புகளுக்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்ள, மூன்று வாரங்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு நிபுணர்கள் பரிந்துரைத்தனர். இந்நிலையில் மேலும் 10 நாட்கள் முடக்கத்தை நீடிப்பது குறித்து அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வைத்தியர் நிஹால் அபேசிங்க வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை அணிக்கு அபார வெற்றி

ஆசிய கிண்ண டி20 தொடரின் குழு B பிரிவில் இன்று (13)...

இலங்கையின் வெற்றி இலக்கு 140 ஓட்டங்களாக நிர்ணயம்..

ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இன்றைய...

கட்டாருடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியது இலங்கை!

இலங்கை கட்டாருடனான தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண்...

பாடசாலைகளுக்கான தவணை விடுமுறை அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி,...