நாட்டில் கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.
இதனால் டொலரை பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தங்கள் கையில் இருந்த டொலரை ரூபாய்க்கு மாற்றுவதற்காக, பண பரிவர்த்தன நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மார்ச் 1ஆம் திகதி அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 360 ரூபாவாகவே இருந்தது. ஆனால் கடந்த 5 நாட்களாக அமெரிக்க டொலரின் விலை வேகமாக சரிந்தது வருகின்றது.
இதேவேளைமேலும் டொலரின் பெறுமதி குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் தங்களது டொலர்களை மாற்றிக் கொள்ள நீண்ட வரிசையில் நின்று வருகின்றனர்.