Date:

(Pics) பல வருடம் காட்டிலுள்ள பழங்களை உண்டு, நீராடாமல் வாழ்ந்து வந்த முன்னாள் போராளி மீட்பு

மட்டக்களப்பில் முன்னாள் போராளி ஒருவர் காட்டிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் பெரிதும் பேசும் பொருளாகியுள்ளது.

Gallery

மட்டக்களப்பு – பட்டிப்பளைப் பிரதேசத்திற்கு உட்பட்ட தாந்தாமலைக் காட்டுப் பகுதியிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

தாந்தாமலைப் பகுதியில் அமைந்துள்ள றெட்பாணா எனும் கிராமத்திற்கு அப்பாலுள்ள காட்டுப் பகுதியில் தூர்ந்து போன கொட்டகை ஒன்றில் வசித்து வந்த அவர் நேற்றைய தினம் (08) மீட்கப்பட்டுள்ளார்.

Gallery

கடந்த 4 வருடங்களாக குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நிலையில் பாலா என்னும் நபரே நடுகாட்டில் இருந்து சடா முடியுடன் மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வளவு காலமும் காட்டிலுள்ள பழங்களை உண்டு, நீராடாமல், தலைமுடி வெட்டாமல் வாழ்ந்து வந்துள்ளதாக தெரியவருகின்றது.

Gallery

தற்போது இவர் மனநலம் பாதிக்கப்பட்ட நபராக காணப்பட்டமையால் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைக்கா அஙகு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் தொடர்பான தகவலறிந்த ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் மற்றும் அவரது சக முன்னாள் போராளிகளும் அவரை தற்போது அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபை மீது கோபா பாய்ந்தது

கொழும்பு நகரில் நிலுவையில் உள்ள மதிப்பீட்டு வரியை வசூலிப்பதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றைத்...

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசேட அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று வருவதாக அத்திணைக்களம்...

சஷீந்திர ராஜபக்ஷவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில்...

கடலில் மிதந்து வந்த கொக்கேன் போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிப்பு?

தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில், இலங்கை கடற்படையினரால் கொக்கேன் போதைப்பொருள் அடங்கியதாக...