மாவனெல்ல பகுதியில் 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர்
நீர்கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்றுமே மாவனெல்ல கனேகொடவில் மோதியதில் பஸ் ஓட்டுனர் உட்பட 23 பேர் காயமடைந்து மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தவிபத்தில் நீர்கொழும்பைச் சேர்ந்த 59 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
photos: lankadeepa