Date:

ரமழான் மாதத்தை முன்னிட்டு முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு விசேட சலுகைகள் அறிவிப்பு

ரமழான் மாதத்தில் முஸ்லிம் அரச அதிகாரிகள், தொழுகை மற்றும் சமய வழிபாடுகளில் ஈடுபடும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்தார்.

இது தொடர்பான அரச நிர்வாகச் சுற்றறிக்கை அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் மற்றும் சட்டச் சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

ரமழான் மாதம் 23ஆம் திகதி தொடங்கி ஏப்ரல் 21ஆம் திகதி முடிவடையும் என்றும், அந்த காலகட்டத்தில் அனைத்து முஸ்லிம் அரசு அதிகாரிகளின் பணி நேரத்தையும் அவர்கள் சமய வழிபாடுகளை மேற்கொள்ளும் வகையில் சிறப்பு விடுப்பு மட்டும் அளிக்கப்படும்.

ரமழான் முடிவடைவதற்கு 14 நாட்களுக்கு முன்னர், பொது சேவை, பொது நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வ அமைப்புகளில் தகுதியான முஸ்லிம் அரசாங்க அதிகாரிகளுக்கு பண்டிகை முன்பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...