மாத்தளை நாவுல பகுதியில் தனது கட்டளையை ஏற்க மறுத்த மணவனுக்கு அசிரியர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த அசிரியர் பாடசாலையிலிருந்து தனது வீட்டிற்கு 2 சமையல் எரிவாயு சிலிண்டர்களை சுமந்து வருமாறு ஆசிரியர் மாணவரிடம் பணித்துள்ளார்.
எனினும் மாணவர் ஆசிரியரின் கட்டளையை ஏற்க மறுத்துள்ளார் இதனால் கோபம் அடைந்த ஆசிரியர் மாணவர் தாக்கப்பட்டுள்ளார்.
தரம் 10 யில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்குள்ளான மாணவன் அம்பான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்குெமாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்,மாணவனின் பெற்றோரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய ஆசிரியர் பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.