உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான திருத்தப்பட்ட திகதி இன்று (03) அறிவிக்கப்படவுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்துவதில்லை என கடந்த வெள்ளிக்கிழமை கூடிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தீர்மானித்தனர்
பின்னர், பல முறை தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் தற்போதைய நிதி நிலைமையை ஆய்வு செய்தனர்.
நாட்டின் தற்போதைய நிதி நிலைமை கருத்திற்கொண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான திருத்தப்பட்ட திகதியை இன்று அறிவிக்கவுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.