மாலைத்தீவின் சட்டத்துறை ஊழியர்களுக்கு மாலைத்தீவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் பயிற்சி பட்டறைகள் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மாலைத்தீவில் ஜனாதிபதி சோலிஹ் பதவியேற்றதிலிருந்து மாலைத்தீவில் நீதித்துறை ஊழியர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சிகளை இந்தியா வழங்கிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் ஒரு கட்டமாக மாலைத்தீவு குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அஹமது ஷகீல் இந்தியாவில் சிறப்பு பயிற்சி திட்டத்தை முடித்துள்ளார்.