மாலைத்தீவு அரசாங்கம் தலைநகர் மாலேயிக்கு அண்மையில் அமைந்துள்ள இரு பாரிய நிலங்களை இரு இந்திய கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
குறித்த நிலங்களை சுமார் 99 ஆண்டுகள் குத்தகைக்கு விட தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள நிலத்தின் பரப்பளவு எவ்வளவு என்பது தொடர்பில் இதுவரை சரியான தகவல் இல்லை என வீட்டு அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நிலப்பரப்பை மேம்படுத்தி, பிற தரப்பினருக்கு குத்தகைக்கு விட இந்திய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக அக் கூட்டுத்தாபனத்தை மேற்கோள் காட்டி செய்திகளை சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.