சமுர்த்தி உட்பட 52 நலன்புரிப் பலன்களைப் பெறுவதற்கு இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யாதவர்கள் அந்தப் பலன்களைப் பெறுவதற்கு உரிமையற்றவர்கள் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்து முடிக்கவிடின், உலக வங்கியின் இந்தத் திட்டத்துக்கான உதவி கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் கீழ் இயங்கும் நலன்புரி சபையினால் வழங்கப்படும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.