பாடசாலையொன்றில் தரம் 11 கல்வி பயிலும் மாணவிக்கு அந்த பாடசாலையின் நடன ஆசிரியர் ஒருவர் வட்ஸ்அப் குறுந்செய்திகளை தொடர்ந்து அனுப்பிய சம்பவம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது.
அந்தவகையில், வெயங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த நடன ஆசிரியர் ஒருவர் அந்தப் பாடசாலையின் தரம் 11 கல்வி கற்கும் மாணவி ஒருவருக்குச் செய்த இந்தச் செயல் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வலயக் கல்வி அலுவலகத்திற்கு அறிவித்தது.
குறித்த மாணவியை தவறு செய்ய தூண்டும் நோக்கில் ஆசிரியர் தொடர்ச்சியாக வட்ஸ்அப் குறுந்தகவல்களை அனுப்பியதாக சந்தேகிக்கப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆசிரியை அனுப்பிய செய்திகளின் ஸ்கிரீன் ஷாட்களை மாணவி தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் முதற்கட்ட விசாரணையில் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரிந்த நபர் ஒருவர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு வழங்கிய அறிவித்தலின் அடிப்படையில், அத்தனகல்ல பிரதேச செயலகத்தின் சிறுவர் உரிமைகள் ஊக்குவிப்பு பிரிவினர் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மாணவியின் தாய் இவவாறு கருத்து தெரிவித்துள்ளார், பாடசாலை அதிபர் தனது மகளை அலுவலகத்திற்கு வரவழைத்து பலர் முன்னிலையில் பல்வேறு கேள்விகளை கேட்டதாகவும் இதனால் தான் அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.