இரத்மலானை கல்தெமுல்ல பிரதேசத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவத்தில் வயோதிப தம்பதியினர் காயமடைந்து களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த குணடு வெடிப்பு சம்பவத்தில் ச்சக்கர வண்டி சேதமடைந்துள்ளது.
இந்த வயோதிப தம்பதியினர் வீட்டிற்கு முன்னால் உள்ள காணியை துப்பரவு செய்து தீயிட்டுக் கொண்டிருந்த போதே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குண்டு வெடித்ததில் சம்பவத்தில் விபத்துக்குள்ளானவர்களின் கை, கால்களில் ஆழமான காயங்களை ஏற்படுத்தியதாக பொலிஸ் அறிவித்துள்ளனர்.
மேலும், குறித்த பகுதி மூடப்பட்டுள்ளதுடன்,அரச இரசாயனப் பகுப்பாய்வாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.