ஆசியாவில் இலங்கையிலேயே நீரிழிவு நோயாளர் அதிகம் இருப்பதாக சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன
இலங்கையில் வயது வந்தவர்களில் 4 பேரில் ஒருவர் இந்த நோயுடன் கண்டறியப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
பல உள்ளூர் பல்கலைக்கழகங்கள், கொழும்பிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சுகாதார கொள்கைக்கான நிறுவனம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
லண்டனை தளமாகக் கொண்ட பிரிட்டிஷ் மெடிக்கல் ஜேர்னல் இந்த வாரம் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி இந்த அதிர்ச்சியான அறிவிப்பு வௌியாகியுள்ளது
லண்டனை தளமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இலங்கையிலுள்ள பெரியவர்களில் நான்கில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும், 3ரில் ஒருவருக்கு உயர் சர்க்கரை அளவு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.