மருதானை ரயில் நிலைய அறிவிப்பாளரின் செயலால் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மருதானை இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணிக்கும் அரை சொகுசு ரயில் நீர்கொழும்பு வரை ரயில் அனைத்து நிலையங்களிலும் நிறுத்தப்படும் என ஆரம்பத்தில் ரயில் நிலைய பெண் ஊழியரின் அறிவித்துள்ளார்.
இந்த அறிவித்தலுக்கு ஏற்ப, தெமட்டகொடயில் இருந்து ராகம வரையிலான ரயில் நிலையங்கள் ஊடாக பயணிகள் அந்த ரயிலில் ஏறியுள்ளனர்.
ரயில் பயணத்தைத் தொடங்கத் தயாரான நிலையில் இன்னொரு அறிவிப்பை வெளியிட்டார். இரண்டாவது நடைமேடைக்கு வந்த ரயில் தெமட்டகொட மற்றும் களனி வரை நிறுத்தப்படும் என்றும் களனியிலிருந்து ராகம வரை நிறுத்தப்படாது என மீண்டும் ஒரு அறிவிப்பை விடுத்துள்ளார்.
இதனால் புறப்பட்ட ரயிலில் ஹொரபே ரயில் நிலையத்தில் இறங்கும் பயணிகள் மிகவும் சிரமத்துடன் குதிக்க வேண்டிய ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறித்த அறிவிபபாளரின் பொறுப்பற்ற செயலினால் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு அசௌகரியம் மற்றும் உயிர் ஆபத்தும் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.