முஜிபுர் ரஹ்மான் பலிகடா ஆக்கப்பட்டு விட்டார் – நான் அவருக்கு சொல்லியும் கேட்க்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வேண்டாம் என அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு தான் அறிவுறுத்தியதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
முஜிபுர் ரஹ்மானை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்தவர் தானே எனக் கூறிய ஜனாதிபதி, அவர் பலிக்கடா ஆக்கப்படப் போவது தமக்கும் தெரியும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
முஜிபுர் ரஹ்மானை நாடாளுமன்றத்தில் வைத்திருக்க முயற்சித்ததாக தெரிவித்த ஜனாதிபதி, இனிமேல் அது பற்றி பேசப்போவதில்லை எனவும் கூறினார்.