தற்போது நாட்டில் மரண சான்றிதழ் வழங்குவது போன்று தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுதல் மட்டுமே எஞ்சியுள்ளது என்று காலியில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களிடம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
பணம் இல்லாத காரணத்தினால் வாக்குச்சீட்டு அச்சிட முடியவில்லை என தேர்தலகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமான Qr முறைமை காரணமாக எரிபொருள் இல்லை, பொலிஸார் கொடுப்பனவு வழங்கமுடியாத நிலையுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டின் அத்தியவசிய செயற்பாடுகளுக்கு மட்டும் பணம் வழங்க முடியும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
யார்? பொறுப்பு சொல்ல வேண்டும் என்பதனை என்னால் கருத்து தெரிவிக்க முடியாது நான் உரிய பதவியில் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் எனக்கு நன்றாக தெரியும்.ஆடு களத்தில் இருப்பவர்கள் எவ்வாறு ஆட வேண்டும் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் எனறார்.