அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் அனைத்து தனியார் பஸ் சாரதி, நடத்துனர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவிசாவளையில் இருந்து அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பயணிக்கும் பஸ் ஊழியர்களே இவ்வாறு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் தூர பிரதேசங்களில் இருந்து குறித்த நெடுஞ்சாலை ஊடாக பயணிக்கும் பஸ்களில் பயணிகளை ஏற்ற வேண்டாம் என வலியுறுத்தி பஸ்களுக்கு பயணிக்க தடை விதித்துள்ளனர்.
இதனால் பயணிகள் மிகுந்த அசௌகரியதிற்கு உள்ளாகியுள்ளனர்.