Date:

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த ஆண்டு (2023) ஜூன் மாத இறுதிக்குள் வௌியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த ஆவர்,உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு எதிர்பார்த்த எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காமை வருத்தத்திற்குரிய விடயமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விடைத்தாள் மதிப்பீடு பணிக்காக வழங்கப்படும் தினசரி கொடுப்பனவு தொடர்பிலும் விசம் தெரிவித்துள்ளன.

தற்போது வழங்கப்படுகின்ற நாளாந்த கொடுப்பனவான 500 ரூபா மட்டுமே வழங்கப்படுகின்றது. குறித்த தொகை போதுமானதாக இல்லை என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

மதிப்பீடு பணிக்காக ஆசிரியர்களின் நாளாந்த கொடுப்பனவான 500 ரூபாவில் இருந்து ரூபா 3,000 ஆக அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இருப்பினும், அது தொடர்பான சுற்றறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைவோம்- ஜனாதிபதி

அண்மைய அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும் வளர்ச்சியடைந்து வந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய...

முகாம்களில் தங்கியுள்ளோரை விரைவாக மீளக் குடியமர்த்த திட்டம்

நிவாரண முகாம்களில் தற்போது சுமார் 7,000 பேர் தங்கியுள்ளதாகவும், அவர்களை 2...

அனர்த்தங்களால் 6000 வீடுகளுக்கு முழுமையான சேதம்

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட...