Date:

BREAKING : க.பொ.த. உயர்தரம் -மதிப்பிடும் பணி காலவரையின்றி ஒத்திவைப்பு

க.பொ.த. உயர்தர விடைத்தாள்களை மதிப்பிடும் பணியை காலவரையின்றி ஒத்திவைக்க பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாளை மறுதினம் (22ம் திகதி) முதல் மதிப்பீடுகள் தொடங்குவதாக இருந்தது எனினும் அந்தந்த பாடங்களுக்கான மதிப்பெண் நடைமுறைகளை, மதிப்பீட்டு பணிக்கு தயார் செய்ய, பல்கலைக்கழக பேராசிரியர்கள் மறுத்ததால் மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு அமைச்சரவை கொள்கை தீர்மானம் எடுத்துள்ளதுடன் அதிகரிக்கப்படவுள்ள கொடுப்பனவுகள் தொடர்பில் நிதியமைச்சின் செயலாளர் மற்றும் நிறுவனங்களின் பணிப்பாளர் நாயகத்துடன் கலந்தாலோசித்து தீர்மானிக்க வேண்டுமென அமைச்சரவை தெரிவித்துள்ளது.

அமைச்சரவையின் தீர்மானத்தின் பிரகாரம், மதிப்பீட்டு ஆசிரியர்களின் நாளாந்த கொடுப்பனவை மூவாயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு அங்கீகாரம் வழங்குமாறு பரீட்சை திணைக்களம் நிறுவனங்களின் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், நிறுவன பணிப்பாளர் நாயகம் கோரிக்கையை அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும், அறிவியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் சில பாடங்களின் மதிப்பீட்டிற்கு போதிய ஆசிரியர்கள் விண்ணப்பிக்காததால் குறித்த பாடங்களின் மதிப்பீட்டிற்கு மீண்டும் ஆசிரியர்களிடம் விண்ணப்பங்களை கோர தேர்வுத்துறை தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யுனெஸ்கோவிலிருந்து விலகிய அமெரிக்கா!

யுனெஸ்கோவின் உறுப்புரிமையிலுருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சார மற்றும்...

மகனின் கைது குறித்து சபையில் உணர்ச்சிவசமானார் ஜகத்

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் விற்ற வாகனம் தொடர்பாக தனது...

Breaking பேஸ்லைன் வீதியில் பாரிய வாகன நெரிசல் மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள், இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கு...

எரிபொருளுக்கு விதிக்கப்பட்ட 50 ரூபாய் வரி நீக்கம் மகிழ்ச்சியான செய்தி வெளியானது

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பழைய கடன்கள் முழுமையாக செலுத்தப்பட்டதும், எரிபொருள் லிட்டருக்கு...