Date:

பட்டினியால் வாடிய குழந்தைகளுக்கு பலாக்காய் பறிக்க முற்பட்ட தாய் பலி – கம்பளையில் சோகம்

கம்பளை, நாரான்விட்ட பகுதியில் பெண்ணொருவர் உணவுக்காக பலாக்காய் பறிக்க மரமேறி முற்பட்டபோது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் பீ.ஜீ. சாந்தி குமாரி என்ற 50 வயதடைய 4 பிள்ளைகளின் தாயே மரணித்துள்ளார்.

அவரது கணவர் தனியார் தறையில் தொழில் புரிபவர். இருப்பினும் நான்கு பிள்ளைகளும் பெண்களாகும். அதில் இருவர் பாடசாலை செல்பவர்கள். இதன் காரணமாக அவரது வாழ்க்கைச் செலவுகளில் சற்று சிரமம் காணப்படுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இவர் வழமையாக பலாக்காய், வடு பலாக்கா (பொலஸ்) போன்றவற்றை அடிக்கடி நாடுவதாக அயலவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையிலே மேற்படி சம்பவம் நடந்துள்ளது.

பலா மரத்திற்கு பக்கத்தில் இருந்த சாதிக்காய் மரத்தில் ஏறி பலாக்காய் பறிக்க முயற்சித்து முடியாத போது, அசாதாரண துணிவுடன் பலா மரத்தில் ஏறிய போதே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்டுகிறது.

காயடைந்த மேற்படி பெண் ஐந்து நாட்கள் கம்பளை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற போதும் சிகிச்சை பயனளிக்காது மரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து; மாணவர்கள் வைத்தியசாலையில்

பாடசாலை  மாணவர்களை, புதன்கிழமை (23)  ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சாலையை...

நாட்டின் நாணயக் கொள்கையில் மாற்றம் இல்லை

நேற்று (22) நடைபெற்ற நாணயக் கொள்கை சபை கூட்டத்தில், நாணயக் கொள்கை...

அடுத்த 24 மணித்தியாலத்தில் காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கற்பிட்டியிலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரைக்கு அப்பாலான பகுதிகளில் காற்றின்...

யுனெஸ்கோவிலிருந்து விலகிய அமெரிக்கா!

யுனெஸ்கோவின் உறுப்புரிமையிலுருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சார மற்றும்...