Date:

ஏழு நாள் சிசுவை தரையில் அடித்துக் கொன்ற தாய் – பயாகலையில் ஜோதிடரை கண்டபின்னர் செய்த வேலை

பிறந்து ஏழு நாட்களே ஆன சிசுவை மூன்று தடவைகள் தரையில் அடித்துக் கொன்ற தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை, பயாகல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

28 வயதுடைய சந்தேகநபரான தாய் தொடர்பில் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 9ஆம் திகதி நாகொட போதனா வைத்தியசாலையில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் இளைய மகளே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பயாகல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டுவதற்காக பெற்றோர் இருவரும் கடந்த 15ஆம் திகதி ஜோதிடர் ஒருவரைச் சந்தித்து வீடு திரும்பிய நிலையில் இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அன்றைய தினம் பிற்பகல் சிசு படுக்கையில் இருந்து விழுந்து விட்டதாக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. எனினும் சிசு உயிரிழந்த நிலையிலேயே காணப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையில் சிசு படுகொலை செய்யப்பட்டமை தெரியவந்ததை அடுத்து சிசுவின் தாயை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாய் மூன்று தடவைகள் சிசுவின் மூக்கை அழுத்தியதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போதே அவர்களுக்கு முதல் முறையாக குழந்தைகள் பிறந்ததாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் ஆரம்பம்

காசா நகரம் முழுவதையும் கைப்பற்றும் திட்டத்தின் கீழ், தரைவழித் தாக்குதலின் முதற்கட்ட...

பொரளையில் தாழிறங்கிய வீதி..! மாற்று வீதிகளைப் பயன்படுத்து.

பொரளை பொலிஸ் பிரிவின் மொடல் ஃபார்ம் சந்திக்கு அருகிலிருந்து டி.எஸ். சேனநாயக்க...

முன்னாள் அமைச்சர் டயானாவுக்கு பிடியாணை

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க...

புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி பாடசாலைக்கு நிதியுதவி வழங்கிய “EWARDS 87” அமைப்பு..!

புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு சுற்று மதில் அமைப்பதற்காக...