பால், தயிர், இறைச்சி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் இருமடங்காக உயர்த்தப்பட உள்ளதாக தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அழைப்பாளர் தெரிவித்தார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டணம் 66 வீதத்தால் அதிகரித்தமையே காரணம் எனவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கால்நடை உற்பத்தியாளர்கள் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் உறைவிப்பான்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுவதனால் இந்த முடிவு எடுக்கவேண்டியுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.