Date:

வாக்களிப்பு ஒத்திவைப்பு -வாக்குச்சீட்டுகளை வழங்கவில்லை

எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தரவுக்கமைய, அறிவித்தலொன்றை விடுத்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

தபால் வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகளை வழங்குவதற்கு ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருந்த அரசாங்க அச்சக பிரதானி, உரிய தினத்தில் அவற்றை வழங்காமை காரணமாக, எதிர்வரும் 23, 24, 28 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த வாக்களிப்பு குறித்த தினங்களில் இடம்பெறாது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் வாக்களிப்பு இடம்பெறும் தினங்கள் மீண்டும் பின்னர் அறிவிக்கப்படுமென சமன் ஶ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நீதிமன்றில் ஆஜராகத் தயார்! சட்டத்தரணி வன்னிநாயக்க அறிவிப்பு

பொலிஸாரால் கைது செய்வதற்காக தேடப்பட்டு வருவதாக கூறப்படும் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க,...

வட மாகாணத்தில் முஸ்லிம் மீள்குடியேற்றம் – ரிட் மனு தள்ளுபடி

வட மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக, 2018ஆம் ஆண்டு பாராளுமன்ற...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை (16) இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம்...

நாடு திரும்பினார் பிரதமர் ஹரிணி

உத்தியோகபூர்வ சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய புதன்கிழமை...