Date:

வாக்களிப்பு ஒத்திவைப்பு -வாக்குச்சீட்டுகளை வழங்கவில்லை

எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தரவுக்கமைய, அறிவித்தலொன்றை விடுத்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

தபால் வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகளை வழங்குவதற்கு ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருந்த அரசாங்க அச்சக பிரதானி, உரிய தினத்தில் அவற்றை வழங்காமை காரணமாக, எதிர்வரும் 23, 24, 28 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த வாக்களிப்பு குறித்த தினங்களில் இடம்பெறாது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் வாக்களிப்பு இடம்பெறும் தினங்கள் மீண்டும் பின்னர் அறிவிக்கப்படுமென சமன் ஶ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...