Date:

சாரதி தூக்கம், பஸ் விபத்து- மாணவன் உயிரிழப்பு!

பல்லேபெத்த பிரதேசத்தில் பஸ்ஸில் இருந்து தூக்கி வீசப்பட்ட பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஊருபொக்க பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சாரதி தூங்கியதன் காரணமாக பஸ் வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வாய்க்காலில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது பஸ் இயந்திரப் பெட்டியில் அமர்ந்திருந்த சிறுவன் தூக்கி வீசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்ட மாணவன் உயிரிழப்பு | Student Who Was Thrown From The Bus Died

நேற்று (15) அதிகாலை பல்லேபெத்த களுவரகஹா வளைவுக்கு அருகில் யாத்ரீகர்கள் சிலரை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதையடுத்து படுகாயமடைந்த பாடசாலை மாணவன் பல்லேபெத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில்

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடகவெல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்போம்

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன என எதிர்க்கட்சித்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373