இலங்கையில் இன்று (10) நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இலங்கையின் மொனராகல மாவட்டத்தில் இவ்வாறு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
மொனராகல, வெல்லவாய – புத்தல – பெல்வத்த பகுதியில் சிறு அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோளில், 3 மெக்னிடியூட் அளவில் சிறு நில அதிர்வு பதிவாகியுள்ளது.
இந்த சிறு அளவிலான நில அதிர்வானது, நாட்டிலுள்ள அனைத்து, நில அதிர்வு உணர் கருவிகளிலும் பதிவாகியுள்ளதாக அந்தப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
துருக்கி, சிரியா நாடுகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலகளாவிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் .
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கதில் இதுவரை 21 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலியாகியுள்ள செய்தி உலகளாவிய அச்சநிலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் இலங்கையர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.