நுவரெலியாவில் இ.போ.ச பஸ்ஸின் சில்லு கழன்று விபத்து நுவரெலியாவில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த இ.போ.ச பஸ்ஸின் பின்பக்க சில்லு பஸ் ஓடிக் கொண்டிருக்கம்போதே கழன்று ஓடிய நிலையில் சாரதியின் சாதுரியத்தால் பாரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது.
நேற்று தினம் பிற்பகல் நுவரெலியா – பதுளை வீதியில் அமைந்துள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக பயணித்துக் கொண்டிருந்த இ.போ.ச பஸ்ஸின் பின்பக்க சில்லு அச்சில் இருந்து திடீரென விலகியது.
இந்நிலையில் சாரதியின் சாமர்த்தியத்தால் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் பஸ் நிறுத்தப்பட்டது என தகவல்கள் தெரிவித்தனர் .
நுவரெலியா நிருபர் – செ.திவாகரன்