பொலிஸாருக்கும் பிக்குமாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
தேரர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போது அப்பகுதியில் குவிக்கப்பட்ட பொலிஸார் அவர்களை தடுக்க முற்பட்டுள்ளனர்.
மேலும், பிக்குமாருடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “பிக்குமார் மீது கை வைக்க வேண்டாம், அவர்களுக்கான மரியாதையை வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.
கொழும்பில் தற்போது பிக்குமார் இணைந்து போராட்டம் முன்னெடுத்து வரும் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.