காலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வேகமான பரவிவருகின்றது.
வீதியில் சென்ற பெண்ணின் தங்க நகையை பறித்துக் கொண்டு ஓடிய திருடனை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துரத்தி சென்று கடலில் குதித்து பிடித்துள்ளார்.
அவர் அந்த திருடனை பிடித்த விதம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
சினிமாவில் இடம்பெறும் சம்பவம் போன்று இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
பொலிஸ் உத்தியோகத்தரிடம் இருந்து தப்பிக்க திருடன் கடலில் குதித்துள்ளார்.
இருந்த போதும் விடாத பொலிஸ் உத்தியோகத்தர் கடலில் குதித்து சந்தேக நபரை கைது செய்துள்ளார்.