எரிபொருள் விலை குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
நாட்டின் வழமைக்கு மாற்றமாக சில இடங்களில் எரிபொருள் வரிசை சற்று ஏற்பட்டதை பார்க்ககூடியதாக இருந்தது.
இந்நிலையில், இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவை கூடவுள்ளது.
இதன்பின்னர் எரிபொருள் விலை குறித்த அறிவிப்பு வரலாம் என எதிர்பார்ப்படுவதாக முக்கிய தரப்பு வட்டரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பெற்றோல் மற்றும் டீசல் உற்பத்தியின் போது குறிப்பிடத்தக்க இலாபம் இல்லை என அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் அண்மையில் சுட்டிக்காட்டப்பட்டது.
அவரால் வெளியிடப்பட்ட எரிபொருள் உற்பத்திக்கான கிரயப்பட்டியல்படி, ஒக்டேன் 95 பெற்றோல் தவிர, வேறெதிலும் குறிப்பிடத்தக்க இலாபங்கள் இல்லை என கூறப்படுகிறது.