Date:

கொழும்பு வீதியில் வாகன விபத்து – இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

பிலியந்தலை கொழும்பு வீதியின் ஜாலியகொட பிரதேசத்தில் தனியார் பேருந்து மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொல்பாகொட யக்கலமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய திருமணமான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பிலியந்தலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இளைஞனின் மோட்டார் சைக்கிளின் முன் சக்கரத்திற்கான பிரேக் உடைந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து கெஸ்பேவயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் முன்பக்க வலது சக்கரத்தில் இளைஞன் சிக்கியுள்ளதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி வேரஹெர கொத்தலாவல பாதுகாப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில மணித்தியாலங்களில் உயிரிழந்துள்ளார்.

பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மேஜர் ஜெனரல் மஜீத் இராணுவ புலனாய்வு படையணியின் புதிய படைத் தளபதி நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...

சவூதியின் இரு தேச தீர்வு முயற்சி : நம்பிக்கையா? ஏமாற்றமா?

    எம்.என்.எம்.யஸீர் அறபாத் – ஓட்டமாவடி.   பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடாத்தி வரும் ஆக்கிரமிப்பும்...

குருநாகல் வைத்தியசாலையில் மருந்தாளுநர்கள் இன்று அடையாள வேலைநிறுத்தம்

குருநாகல் போதனா வைத்தியசாலையில் இன்று (13) 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம்...

பேருந்துகளில் அறிமுகமாகும் புதிய திட்டம்

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைப்பதற்கான ஒரு முன்னோடித் திட்டம்...